புதுச்சேரியில் பெட்ரோல் பங்கில் தமிழக இளைஞருக்கு சரமாரி கத்திக்குத்து

புதுச்சேரி யூனியன் வில்லியனூரில் பெட்ரோல் போட வந்த தமிழக இளைஞரை கத்தியால் தாக்கிய கும்பலை சிசிடிவி உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி – விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் தமிழகத்தை சார்ந்த பழனி என்பவர் பெட்ரோல் போட சென்ற போது கரிக்கலாம்பாக்கத்தைச்  சேர்ந்த 3பேருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது 3பேரும்  பழனியை கத்தியால் தாக்கியும், வாகனத்தை சேதப்படுத்தி விட்டும் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிசிடிவி உதவியுடன்  ஒருவரை போலீசார்  கைது செய்துள்ளனர். மற்ற 2பேரை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.