4 மாநில பாஜ மேலிட பார்வையாளர்கள் நியமனம்

புதுடெல்லி: ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், உபி., உத்தரகாண்ட் மாநில மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உபி., உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜ வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. உபி.யில் யோகி ஆதித்ய நாத் மீண்டும் முதல்வராக உள்ளார். ஆனால் உத்தரகாண்ட், மணிப்பூர், கோவாவில் முதல்வர்கள் யார் என்று இன்னும்  தேர்வு செய்யப் படவில்லை. இந்நிலையில், பாஜ வெற்றி பெற்ற மாநிலங்களில் முதல்வர்களை தேர்வு செய்வதற்கான மேலிட பார்வையாளர்களாக உபி.க்கு தலைவராக உள்துறை அமைச்சர் அமித் ஷா, துணை தலைவராக பாஜ தேசிய துணை தலைவரான ரகுபர் தாஸ், உத்தரகாண்ட்டிற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், துணை தலைவராக மீனாட்சி லெகி, மணிப்பூருக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை தலைவராக கிரண் ரிஜிஜூ, கோவாவுக்கு வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், துணை தலைவராக இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோரை நியமித்து பாஜ மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இன்னும் சில நாட்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களுக்கு சென்று பணியாற்ற தொடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.