மே 20 அரை நாள் பள்ளிகள் விடுமுறை – மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து, நடப்பு கல்வி ஆண்டு முடியும் வரை, அனைத்துப் பள்ளிகளும் அரை நாள் மட்டுமே செயல்படும் என, மாநில அரசு அறிவித்துள்ளது.

அண்டை மாநிலமான
தெலங்கானா
மாநிலத்தில், முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், கடந்த சில நாட்களாக, வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கோடைக் காலம் விரைவில் தொடங்க உள்ள நிலையில், தற்போதே தெலங்கானா மாநிலத்தில் சூரியன் சுட்டெரிக்கிறது. இந்நிலையில், பள்ளி மாணவர்களின் நலன் கருதி, நடப்பு கல்வி ஆண்டு முடியும் வரை, அனைத்துப் பள்ளிகளும் அரை நாள் மட்டுமே செயல்படும் என, தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெலங்கானா மாநில கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

வெயிலின் தாக்கம் காரணமாக, பள்ளிகள் செயல்படும் நேரம் குறைக்கப்படுகிறது. அதன்படி, இன்று முதல், நடப்பு 2021 – 2022 கல்வி ஆண்டின் கடைசி வேலை நாள் வரை, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளும், காலை 8 மணி முதல், மதியம் 12.30 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு மதியம் 12.30 மணிக்கு மதிய உணவு வழங்கப்பட வேண்டும். அதே நேரத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகளுக்கு அரை நாள் விடுப்பு வழங்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.