ஆலியா பட் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய ரன்பீர் கபூரின் அம்மா… வைரலாகும் புகைப்படம்!

பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட், இன்று மார்ச் 15-ல் தனது 29வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரின் பிரம்மாஸ்திரா (Brahmastra) படத்தின் படக்குழுவினர் ஆலியா பட்டின் போஸ்ட்டரையும், அவரின் கதாபாத்திரம் இடம்பெற்ற ஒரு டீசரையும் வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, பாலிவுட் நடிகையும் ரன்பீர் கபூரின் அம்மாவுமான நீது கபூர், ஆலியா பட்டிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

நீது கபூரின் பதிவு

இதற்கு முன்னரே, ஆலியா பட் – ரன்பீர் கபூர், இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களும் ரன்பீர் கபூர் குடும்பத்துடன் ஆலியா பட் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. அவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கடந்த வருடமே செய்திகள் வெளியாகின.

தற்போது ரன்பீர் கபூரின் அம்மா நீது கபூர், ஆலியா பட் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் ஆலியா பட் மற்றும் நீது கபூர் இருவரும் ஒரே நிறத்தில் உடையணிந்து செல்ஃபி எடுத்துள்ளனர். அதில், “பார்ப்பதற்கு மட்டுமில்லாமல் மனதளவிலும் மிகவும் அழகாக இருக்கும் ஆலியா பட்டுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டிருந்தார் நீது கபூர்.

அண்மையில் ஆலியா நடித்த ‘கங்குபாய் கத்தியவாடி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் இவர் நடித்த ‘RRR’ படம் வரும் மார்ச் 25-ல் வெளியாகவுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.