உக்ரைனில் இருந்து 23 ஆயிரம் இந்தியர்களை மீட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி:
உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூதரக அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகளின் நிர்வாகிகளுடன் பிரதமர்  மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
உக்ரைனில் இருந்து சுமார் 23,000 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலைகளில் இந்த மீட்பு நடவடிக்கையை நடத்துவது மிகவும் சவாலானது. உக்ரைனில் இருந்து 18 நாடுகளை சேர்ந்தவர்களையும் நாம் பத்திரமாக வெளியேற்றியுள்ளோம். 
உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு 90 டன் நிவாரண பொருள் உதவி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்கு அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது என இந்த உரையாடலின் போது பிரதமர் தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
எந்தவொரு சர்வதேச நெருக்கடியின் போதும் தனது குடிமக்களுக்கு உதவ இந்தியா எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டுள்ளதை பிரதமர் நினைவு கூர்ந்ததாகவும்,  ஆபரேஷன் கங்கா நடவடிக்கையில் குழுவாக ஈடுபட்டுள்ள அனைவரும் வெளிப்படுத்திய தேசபக்தி உணர்வு, சமூக சேவை உணர்வு  ஆகியவற்றை பிரதமர் பாராட்டியதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.