திருவனந்தபுரத்தில் சர்வதேச திரைப்பட விழா : மார்ச் 18 ல் துவக்கம்

திருவனந்தபுரம்:26வது சர்வதேச திரைப்பட விழா மார்ச் 18 ல் திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது.

கோவா திரைப்பட விழாவுக்கு அடுத்த படியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த விழாவை அன்று மாலை 6:00 மணிக்கு திருவனந்தபுரம் நிஷாகந்தி ஆடிட்டோரியத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.

எட்டு நாட்கள் நடைபெறும் விழாவில் இந்தியா மட்டுமின்றி ஆப்கானிஸ்தான், கொரியா, ஈரான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் 180க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ஏழு பிரிவுகளில் திரையிடப்படும். மார்ச் 25 ல் சிறந்த படங்களுக்கான விருதுகள் வழங்கப்படும். டிசம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் இந்த விழா கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.