பஞ்சாப் முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் பகவந்த்மான்..

பஞ்சாப் முதலமைச்சராக நாளை பகவந்த்மான் பதவி ஏற்கிறார்.

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, 92 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. முதலமைச்சராக பகவந்த் மான் நாளை பதவியேற்க உள்ளார்.

பதவியேற்பு விழாவில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.பதவி ஏற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த கட்கர் கலான் என்ற கிராமத்தில் நடைபெறுகிறது.

இதனிடையே  தனது எம்.பி. பதவியை பகவந்த் மான் ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.