பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்.. 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு.!

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு நீதிமன்றம் 25 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செட்டிமாரம்பட்டி அப்பகுதியில் லாரி ஓட்டுனராக பிரபாகரன் என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 17 பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் பிரபாகரனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரபாகரனுக்கு 1000 ரூபாய் அபராதமும், 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

மேலும், சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிரபாகரனுக்கு மொத்தமாக 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.