மதுரையில் செல்போன் கடை உரிமையாளர் வீட்டிற்குள் புகுந்து 45 சவரன் நகைகளை திருடிய இருவர் கைது.!

மதுரையில், செல்போன் கடை உரிமையாளர் வீட்டிற்குள் புகுந்து 45 சவரன் நகைகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் வெளியே சென்ற விமலநாதன் என்பவர், இரவு வீட்டிற்குத் திரும்பிய போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 45 சவரன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார், திருடு போன நகைகளை மீட்டனர்.

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.