ஆப்கானிஸ்தானுக்கு 2000 டன் கோதுமையை அனுப்பி வைத்த இந்தியா.!

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனித நேய உதவியாக , 2 ஆயிரம் டன் கோதுமையை இந்தியா அனுப்பி வைத்தது.

அமிர்தசரஸ் அடுத்த வாகா எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் வழியாக சரக்கு வாகனங்களில் கோதுமை மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.மொத்தம் 50 ஆயிரம் டன் கோதுமையை அனுப்பி வைக்க ஆப்கானுக்கு இந்தியா வாக்குறுதி அளித்துள்ளது.

2 ஆயிரம் டன் வீதம் நேற்று நான்காவது தவணை அனுப்பி வைக்கப்பட்டதில் இதுவரை 8 ஆயிரம் டன் கோதுமை அனுப்பப்பட்டுள்ளது. இந்த கோதுமை மூட்டைகளை ஏற்றிச் சென்ற ஆப்கான் வாகன ஓட்டுனர்கள் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.