உக்ரைன் – ரஷ்யா போர்: செல்லப்பிராணிகளை மீட்கும் பீட்டா!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வ முடிவுகளும் எடுக்கப்படவில்லை.

இதனிடையே, ரஷ்ய படைகள் மொழியும் குண்டு மழையில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால், உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர்.

உக்ரைனில் இருந்துசுமார் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளதாக ஐ.நா., சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து வெளியேறிய பெரும்பானால மக்கள் அண்டை நாடுகளான போலாந்து, ஹங்கேரி, ஸ்லொவாக்யா, ருமேனியா மற்றும் மால்டோவா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா., சபை தெரிவித்துள்ளது.

விரைவில் நாடு முழுவதும் ஊரடங்கு: அரசு எடுக்கும் முடிவு!

இது இரண்டாவது உலகப்போருக்கு பின் ஐரோப்பா கண்ட மிக விரைவான வெளியேற்றம் என்று ஐ.நா.சபை அகதிகள் ஆணையத்தின் ஆணையர் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார். உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் மக்கள் தாங்கள் குடும்பத்தில் ஒன்றாக வளர்த்த செல்லப்பிராணிகளை உடன் அழைத்துச் செல்ல முடியாத இக்கட்டான சூழலில் இருக்கின்றனர்.

இந்த நிலையில், அனாதையாக விடப்படும் செல்லப் பிராணிகளை மீட்கும் பணியை கையில் எடுத்துள்ளது ஐரோப்பிய
பீட்டா
தன்னார்வ அமைப்பு. இந்த அமைப்பின் மூலம் 100க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகள் போலாந்துக்கு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாரத்தில் நான்காவது முறையாக மீட்பு பணி நடைபெற்றதாகவும், இதுவரை 300க்கும் மேற்பட்ட வளர்ப்பு பிராணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.