கர்நாடகா: வழிமறித்து விரட்டிய காட்டு யானை; ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் எஸ்கேப்

பந்திப்பூர் வனப்பகுதிக்குள் சென்ற ஜீப்பை, காட்டு யானை ஆக்ரோஷமாக துரத்திய நிலையில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் அனைவரும் பாதிப்புமின்றி உயிர் தப்பினர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி உள்ளது கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம். இந்த வனப் பகுதிக்குள் நேற்று சுற்றுலா பயணிகளை அழைத்துக்கொண்டு சபாரி ஜீப் சென்றிருக்கிறது. அப்போது வனப்பகுதிக்குள் இருந்த காட்டு யானை ஒன்று ஜீப்பை ஆக்ரோஷமாக துரத்தி இருக்கிறது.
image
இந்நிலையில், மண் சாலையாக இருந்த போதும் ஓட்டுநர் எவ்வித அச்சமுமின்றி ஜீப்பை பின்னால் இயக்கிய வாரே வந்திருக்கிறார். குறிப்பிட்ட தூரம் வரை ஜீப்பை துரத்திய காட்டுயானை ஒருகட்டத்தில் நின்றிருக்கிறது. இந்த காட்சிகளை ஜீப்பில் பயணித்த சுற்றுலா பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
ஓட்டுரின் சாமர்த்தியத்தால் ஜீப்பில் இருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.