சட்டவிரோதமாக அமெரிக்கா செல்ல முயன்ற 136 இந்தியர்களை காணவில்லை

அகமதாபாத்: சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு செல்ல முயன்ற 136 இந்தியர்களை காணவில்லை. அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த ஆண்டு புள்ளிவிவரத் தின்படி அமெரிக்காவில் சுமார்ஒரு கோடி பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவர்களில் 5.87 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர். இந்தியாவின் வடமாநிலங்களில் இருந்து அமெரிக்காவில் சட்டவிரோதமா குடியேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குஜராத்தின் அகமதாபாத், காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 37 குடும்பங்களை சேர்ந்த 136 இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற திட்டமிட்டனர். கடத்தல் கும்பல் மூலம் துருக்கி- மெக்ஸிகோ வழித்தடம் வாயிலாக அமெரிக்காவுக்கு செல்ல அவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

அண்மையில் துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சென்ற அவர்களை காணவில்லை. அனைவரும் கடத்தப்பட்டிருக்கலாம் என்றுஅஞ்சப்படுகிறது. இதுகுறித்து குஜராத் போலீஸார் கூறியதாவது:

குஜராத்தில் இருந்து 37 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியேற திட்டமிட்டு கடந்த ஜனவரி 10 முதல் 20-ம் தேதி வரை துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சென்றுள்ளனர். அவர்களின் பயண ஏற்பாடுகளை கடத்தல் கும்பல் செய்திருக்கிறது.

துருக்கியில் இருந்து மெக்ஸிகோவுக்கு விமானம் அல்லது கப்பல் மூலம் சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்குள் நுழைய திட்டமிடப்பட் டுள்ளது.

ஆனால் துருக்கியை சேர்ந்த சில சமூகவிரோத கும்பல்கள், இந்தியர்களை கடத்திச் சென்றுள்ளன. அவர்களை விடுவிக்க ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரைபிணைத் தொகை கேட்டு மிரட்டுவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் யாரும் இதுவரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இவ்வாறு போலீ ஸார் தெரிவித்தனர்.

குஜராத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர், கடந்த ஜனவரியில் அமெரிக்க எல்லையில் கடுங்குளிரில் உயிரிழந்தனர். இதன்பிறகே இந்தியாவில் செயல்படும் மனித கடத்தல் கும்பல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

இந்த கும்பல்களோடு தொடர்புடைய துருக்கி, மெக்ஸிகோ கடத்தல்காரர்கள் பெரும் தொகையை பெற்றுக் கொண்டு இந்தியர்களை அமெரிக்காவுக்கு கடத்தி வருகின்றனர். ஆனால் எல்லையை கடக்கும்போது அமெரிக்க பாதுகாப்பு படையினரால் இந்தியர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

பயணத்தின்போதும் ஏராளமான இந்தியர்கள் உயிரிழக்கின் றனர். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றுபல்வேறு தரப்பினர் வலியுறுத்தி யுள்ளனர்.

துருக்கியை சேர்ந்த சில சமூகவிரோத கும்பல்கள், இந்தியர்களை கடத்தி சென்று பிணைத் தொகை கேட்டு மிரட்டுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.