சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி-தலைக்கவசம் அணியாமல் வாகனங்களில் வந்தவர்களுக்கு காதில் பூ செருகி விழிப்புணர்வு

வேலூரில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதனை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் நந்தகுமார், சாலையில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களின் காதில் பூவை செருகி நூதன விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்போது வேலூர் மாநகர மேயர் சுஜாதா உட்பட சட்டமன்ற உறுப்பினர்களும் உடன் இருந்தனர்.

வேலூர் கோட்டை எதிரே உள்ள காந்தி சிலை அருகில் இருந்து தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று தனியார் பள்ளி ஒன்றில் நிறைவடைந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.