ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்காக தமிழக அரசு செலுத்திய வைப்புத்தொகை வட்டியுடன் திருப்பி அளிக்கப்பட்டது

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு அரசு செலுத்திய 68 கோடி ரூபாய்  வைப்பு தொகை, நீதிமன்ற உத்தரவையடுத்து வட்டியுடன் மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.

வேதா நிலையம் இல்லத்தை அரசுடமையாக்கி நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைடுயடுத்து கையகப்படுத்தும் நடவடிக்கையை அரசு கைவிட்டது.இந்நிலையில் இந்த வழக்கு 6-வது உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி உத்தரவின்படி நீதிமன்ற பதிவாளர் கணக்கில் டிபாசிட் செய்யப்பட்டிருந்த வைப்பு தொகை வட்டியுடன் சேர்த்து மொத்தம் 70 கோடியே 40 லட்சத்து 87 ஆயிரத்து 713 ஆக தென் சென்னை வருவாய் கோட்டாட்சியரின் கணக்குக்கு திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.