பஞ்சாப் முதலமைச்சராக பதவியேற்றார் பகவந்த் மான்

பஞ்சாபில் ஆம் ஆத்மிக் கட்சி சார்பில் புதிய முதலமைச்சராக பகவந்த் மான் பதவியேற்றுக்கொண்டார்.

அவருக்கு ஆளுநர் பன்வாரி லால் புரோகித் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார். பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மிக் கட்சி 92 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. விடுதலைப் போராட்டத் தியாகி பகத்சிங் பிறந்த கட்கார் களன் என்னும் ஊரில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது.

பஞ்சாபின் 17ஆவது முதலமைச்சராகப் பதவியேற்ற பகவந்த் மானுக்கு ஆளுநர் பன்வாரி லால் புரோகித் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.

விழாவில் ஆம் ஆத்மிக் கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சனியன்று சண்டிகரில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.