பூட்டியிருக்கும் வீடுகளை பகலில் நோட்டமிட்டு இரவில் திருடிய கும்பல்,உடந்தையாக இருந்த வழக்கறிஞர் கைது..!

மதுரையில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் உள்ளிட்டவற்றைத் திருடி வந்த கும்பலையும் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வந்த வழக்கறிஞரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தங்குடி மற்றும் அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை பகலில் நோட்டமிட்டு இரவில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய நிலையில், முருகன், கார்த்திக்கண்ணன், கருப்பையா ஆகியோரையும் திருட்டில் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வந்த வழக்கறிஞர் சௌந்தரபாண்டியனையும் கைது செய்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

அவர்களிடமிருந்து 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் 18 ஆயிரத்து 700 ரூபாய் ஆகியவற்றை கைப்பற்றினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.