மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை! – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு



மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணையை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் முன்வைக்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

மின்வலு எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் மின்வலு அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டதுடன், இன்றைய கலந்துரையாடலின் போது அது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் இது தொடர்பான யோசனை முன்வைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.