ராஜஸ்தான் அணியின் கேப்டன் மாற்றம் – ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே நடந்த அதிர்ச்சி சம்பவம்



ராஜஸ்தான் அணியின் கேப்டன் மாற்றப்பட்டதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியடைந்தனர். 

15வது ஐபிஎல் சீசன் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கி வரும் மே 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அணிகளின் வீரர்களும் மும்பையில் உள்ள பயோ பபுளுக்கு இணைந்து வருகின்றனர்.

இதற்காக ஒவ்வொரு அணியும் வித்தியாசமான முறையில் தங்கள் அணி வீரர்கள் குறித்தும், ஜெர்சி பற்றியும் வீடியோ வெளியிட்டு வருகிறது. இதனிடையே ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியான ஜெர்சி அறிமுக வீடியோவில் கூட அவர் இடம் பெற்றிருந்தார். 

இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் ட்விட்டர் பக்கத்தில் அணியின் புதுகேப்டனுக்கு வாழ்த்துக்கள் என கூறி யுஸ்வேந்திர சாஹல் படம் இடம் பெற்றிருந்தது. ஒருநாள் இரவில் எப்படி கேப்டன் மாற்றப்படுவார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்த நிலையில் சஞ்சு சாம்சனும் சாஹலுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து இது எப்படி சாத்தியம் என ரசிகர்கள் குழம்பி கொண்டிருக்க ராஜஸ்தான் அணியின் அட்மினிடம் பாஸ்வேர்டை பெற்று யுஸ்வேந்திர சாஹல் தான் அத்தகைய பதிவை வெளியிட்டதாக அறிவிக்கப்பட்டதால் இப்பிரச்சனை முடிவுக்கு வந்தது. மேலும் அஸ்வின், ஜோஸ் பட்லர் ஆகியோரையும் இந்த ட்விட்டரில் சாஹல் வம்பிழுத்து வைத்திருந்தார். 

இது ராஜஸ்தான் அணியின் விளம்பர யுக்தி என கூறப்பட்டாலும், இதனை கொஞ்சம் விளையாட்டிலும் செலுத்தினால் வெற்றியை அள்ளலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.