பி.எப்., பங்களிப்புக்கு வரி: சட்ட விதிகள் அறிவிப்பு| Dinamalar

புதுடில்லி : கடந்தாண்டு பட்ஜெட் தாக்கலின்போது, வருங்கால வைப்பு நிதிக்கு வருமான வரி விதிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, ‘தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு, ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பங்களிப்புக்கு வரி விதிக்கப்படும். அரசு பணியில் உள்ளோருக்கு, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பங்களிப்புக்கு வரி விதிக்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டது.

இது, நடப்பு 2021 – 2022 நிதியாண்டிலேயே நடைமுறைக்கு வருகிறது. இதை செயல்படுத்தும் வகையில், வருமான வரிச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

‘பி.எப்., கணக்கு வைத்துள்ளோரில், 1 சதவீதம் பேரே இவ்வாறு வரி செலுத்த நேரிடும்’ என, பட்ஜெட் தாக்கலின்போது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இத்திட்டத்தின்படி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் வருங்கால வைப்பு நிதி கணக்கில், ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வரை வரி வசூலிக்கப்படாது.

அதற்கு மேற்பட்ட தொகைக்கு மட்டுமே வரி வசூலிக்கப்படும். அதே நேரத்தில், அரசு பணியில் உள்ளோருக்கு, 5 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு வரி கிடையாது. அதற்கு மேற்பட்ட தொகைக்கு மட்டும் வரி பிடித்தம் செய்யப்படும்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.