ரஷ்ய வீரர்கள் தாக்குதலில் மரியுபோல் நகரில் மட்டும் 2,300 பொதுமக்கள் உயிரிழப்பு எனத் தகவல்

உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் ஏராளமான மக்கள் உணவு, தண்ணீர் இன்றி தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ரஷ்யப் படைகளால் அந்த நகரம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

ரஷ்ய வீரர்களின் தாக்குதலில் மரியுபோல் நகரில் மட்டும் 2 ஆயிரத்து 300 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து தப்பி வந்தவர்கள் தெரிவித்தனர்.

மேலும் குடியிருப்பாளர்கள் உணவு, தண்ணீர், வெப்பம் மற்றும் மருந்துக்காக போராடி வருவதாகவும், உயிரிழந்தவர்களின் உடல்கள் சாலைகளில் கிடப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.