ஐபிஎல்! கையில் ஓரளவுதான் பணம் இருந்தது… தமிழன் நடராஜன் தொடர்பில் பயிற்சியாளர் தகவல்


ஐபிஎல் போட்டியில் புதிதாக இணைந்துள்ள அணியான குஜராத் டைட்டன்ஸில் தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்யாதது ஏன் என்பது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா பேசியுள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் வாஷிங்டன் சுந்தரை ரூ. 8.75 கோடிக்கும் நடராஜனை ரூ. 4 கோடிக்கும் சன்ரைசர்ஸ் அணி தேர்வு செய்தது. ஏலத்தில் இவ்விருவரை
தேர்வு செய்ய இதர அணிகளுடன் கடுமையாகப் போராடியது குஜராத் அணி.

இதையும் படிங்க: அதிர்ஷ்டமாக மாறிய நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் இரட்டை குழந்தைகள் பார்த்த முதல் ஐபிஎல் போட்டி! வைரல் புகைப்படம்

ஆனால் தொகை மேலும் அதிகமாகவே, போட்டியிலிருந்து விலகியது. இதுபற்றி நெஹ்ரா அளித்த பேட்டியில், நாங்கள் ஏலத்துக்கு முன்பே மூன்று வீரர்களைத் தேர்வு செய்தோம். பாண்டியா, ரஷித் கானுக்குத் தலா ரூ. 15 கோடி, ஷுப்மன் கில்லுக்கு ரூ. 8 கோடி. நீங்கள் குறிப்பிடும் வீரர்களையும் தேர்வு செய்திருக்கலாம்.

ஆனால் எங்கள் கையில் ஓரளவுதான் பணம் இருந்தது. உதாரணத்துக்கு வாஷிங்டன் சுந்தர், நடராஜன், ஷ்ரேயஸ் ஐயருக்காகக் குறிப்பிட்ட தொகை வரை வழங்க இருந்தோம். ஓர் அணிக்கு வெற்றிகளைத் தரக்கூடிய வீரர்கள் தேவைதான்.

ஆனால் எதற்கும் ஒரு விலை உண்டு. பிறகு ஏலத்தில் நாங்கள் ஷமி, ஃபெர்குசன், ஜேசன் ராய் ஆகியோரைத் தேர்வு செய்தோம் என கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.