கேரளா: காரில் வந்தவர்களை துரத்தி தாக்க முற்பட்ட ஒற்றை காட்டு யானை

கேரளாவில் திடீரென சாலையில் ஒற்றை யானை நின்றபோதும் வாகனத்தில் இருந்தக் குழந்தைகள் உட்பட அனைவரையும் சுதாரித்து கொண்ட ஓட்டுநர் எவ்வித பாதிப்பும் இன்றி காப்பாற்றியுள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் தனது உறவினர்கள் மற்றும் குழந்தைகளோடு காரில் சென்று இருக்கிறார். இரவு 10.30 மணி அளவில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் கார் சென்றபோது திடீரென சாலையின் நடுவே காட்டு யானை ஒன்று நின்றிருக்கிறது. காரை கண்ட யானை பலமுறை தாக்க முற்பட்டு இருக்கிறது.

காரில் இருந்த குழந்தைகள் அனைவரும் அச்சத்தில் கதறினர். ஆனால், காரை ஓட்டிய சுதிஷ் சிறிதும் அச்சப்படாமல் சாலையில் நின்று யானையை எதிர்கொண்டார். சிறிது நேரம் சாலையில் நின்று மிரட்டிய யானை பின்னர் அங்கிருந்து கடந்து சென்றது. இந்தக் காட்சிகளை காரில் பயணிப்பவர்கள் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.