சூர்யாவுக்கு ஜோடியான விஜய் சேதுபதி 'மகள்': பயில்வான் சொன்னது தான் பயமே

பல ஆண்டுகள் கழித்து சூர்யாவை வைத்து படம் இயக்குகிறார்
பாலா
. தற்போதைக்கு
சூர்யா
41 என்று அழைக்கப்படும் அந்த படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் துவங்கியது.

கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் தயாரிக்கிறது.

இந்நிலையில் சூர்யாவுக்கு ஜோடியாக விஜய் சேதுபதியின் ரீல் மகளான
க்ரித்தி ஷெட்டி
நடிப்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் சூர்யா படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இதற்கிடையே பயில்வான் ரங்கநாதன் பாலா பற்றி தெரிவித்தது தான் ரசிகர்களை கவலை அடைய செய்திருக்கிறது. பாலா ஒரு சேடிஸ்ட், அவருக்கு அழகான பெண்களை பிடிக்காது. அதனால் தான் தன் படங்களில் நடிகைகளை கருப்பாக்கி, அசிங்கமாக காட்டுவார் என்றார்.

க்ரித்தி ஷெட்டியை என்ன செய்யப் போகிறார் பாலா என்பது தான் ரசிகர்களின் கவலையே. தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் க்ரித்தி ஷெட்டி கோலிவுட்டுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினார்கள்.

தனுஷ் மாதிரியே அதிரடி முடிவு எடுத்த பாலாவின் மாஜி மனைவி
அவர்களின் ஆசையை பாலா நிறைவேற்றி வைத்திருக்கிறார். மனைவி முத்துமலரை விவாகரத்து செய்த கையோடு சூர்யா பட வேலையை துவங்கியிருக்கிறார் பாலா.

அடுத்த செய்திVijay:ஒத்த வார்த்தையில் விஜய்யின் மாஸ் பட இயக்குநரை அதிர வைத்த தனுஷ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.