நடிகை பாலியல் பலாத்கார வழக்கு: நடிகர் திலீப் இன்று மீண்டும் போலீஸ் விசாரணைக்கு ஆஜர்

திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஓடும் காரில் பிரபல நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலையான திலீப் மீது விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதற்காக அவரை போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நடிகர் திலீப் மற்றும் அவரது உறவினர்கள் பயன்படுத்திய செல்போன்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். செல்போனில் இருந்த சில ஆதாரங்களை திலீப், அழித்துவிட்டதாக போலீசார் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறிய போலீசார் 2 நாட்களுக்கு முன்பு குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக வேண்டும் எனக்கூறியிருந்தனர்.
அன்று தனக்கு தனிப்பட்ட வேலைகள் இருப்பதாக கூறிய திலீப், விசாரணைக்கு ஆஜராக விலக்கு கேட்டார். இதையடுத்து இன்று பகல் 11.30 மணிக்கு ஆலுவாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆனார். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.