பகிரங்க சர்ச்சைக்கு தயாரா?| Dinamalar

மாண்டியா : எம்.எல்.ஏ.,க்கள் வேலையை நானே செய்கிறேன் என கூறிய மாண்டியா தொகுதி எம்.பி., சுமலதாவுக்கு பகிரங்க சர்ச்சை நடத்த தயாரா என ம.ஜ.த., எம்.எல்.ஏ., தம்மன்னா கூறினார்.மாண்டியா மாவட்டத்தில் சுயேச்சை எம்.பி., சுமலதாவுக்கும், ம.ஜ.த., – எம்.எல்.ஏ.,க்களுக்கும் இடையேயான மோதல் வலுத்து வருகிறது.

மேலும் மாண்டியா மாவட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் செய்ய வேண்டிய வேலையை நான் செய்கிறேன் என கூறியிருந்தார். இதற்கு ம.ஜ.த.,வினரிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.இது குறித்து மத்துார் ம.ஜ.த., – எம்.எல்.ஏ., தம்மன்னா கூறியதாவது:நான் இன்னொருவருரிடம் சான்றிதழ் பெறும் அளவுக்கு இல்லை. எனக்கு தொகுதி மக்கள் என்ன சான்றிதழ் கொடுக்கின்றனர்

என்பதே முக்கியம்.பிரச்னை இருந்தால் மக்கள், எங்களிடம் வருவர். அதை விடுத்து சுமலதாவிடம் சென்றால், அவர் தீர்த்து வைக்கட்டும். என்னுடைய வேலைகள் குறித்து விவாதம் செய்ய தயாராக இருக்கிறேன். அவர் தயாரா என்பதை சொல்ல வேண்டும். எப்போது வேண்டுமானலும் வரட்டும். நான் தயாராக இருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோல நாகமங்களா ம.ஜ.த., – எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடாவும் கண்டனம் தெரிவித்து கூறுகையில், ”தன் அதிகார எல்லையை புரிந்து நடக்க வேண்டும். அவர் பெண், எங்களது சகோதரி என்று பார்க்கிறேன். எங்களை பற்றி தொகுதி மக்களுக்கு தெரியும்” என, குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.