#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – நோபல் பரிசு வென்றவரின் பத்திரிகைக்கு தடை விதித்தது ரஷியா

29.3.2022
00.15: போருக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததாக கூறி, நோபல் பரிசு பெற்ற டிமிட்ரி முராடோவின் நோவா கெஜட் என்ற நாளிதழை ரஷிய அரசு தடை செய்துள்ளது. இதன் உரிமையாளரான டிமிட்ரி முராடோவ் கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடனான நேர்காணலை ஒளிபரப்புவதை, வெளியிடுவதை தவிர்க்கும்படி ரஷியாவின் தகவல் தொடர்பு கண்காணிப்பு அமைப்பு ரஷிய ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.