வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை!



நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள்  வேகமாக  அதிகரித்துச் செல்கின்றது.  வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. 

அதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ. 185,000 ஆக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை சுமார் 170,000 ரூபாவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, சந்தையில் தங்கத்துக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.