Dhanush:தொடர்ந்து 'அதையே' செய்யும் தனுஷ்: மாறவே இல்ல

தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர். அவர்களை சேர்த்து வைக்க இரு வீட்டாரும் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை.

தனுஷை பிரிந்த பிறகு கெரியரில் பிசியாகிவிட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். முசாபிர் எனும் காதல் பாடல் வீடியோவை இயக்கி, தயாரித்து வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

இதையடுத்து 3 படங்களை இயக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஓ சாத்தி சல் படம் மூலம் பாலிவுட் செல்கிறார். ஐஸ்வர்யா கிளம்பிய பிறகு தன் கவனத்தை திசை திருப்ப தொடர்ந்து படங்களில் பிசியாக இருந்து வருகிறார்
தனுஷ்
.

தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில்
நானே வருவேன்
, வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இது தவிர்த்து இரண்டு இந்தி படங்களிலும் நடிக்கவிருக்கிறார். அதில் ஒன்று மெகா பட்ஜெட் படமாகும்.

Dhanush:தனுஷ் பற்றி புது மேட்டர் சொன்ன பயில்வான் ரங்கநாதன்
முன்னதாக ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ்ந்தபோது பிரச்சனை ஏற்பட்டபோது எல்லாம் புதுப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டார் தனுஷ். படப்பிடிப்புக்கு சென்றுவிட்டால் குடும்ப பிரச்சனையில் இருந்து கவனத்தை திசை திருப்பலாம் என்று அப்படி செய்திருக்கிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகும் தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்திப்பா… வேற லெவல்… 3 நாட்களில் கோடிகளை அள்ளிக்குவித்த ஆர்ஆர்ஆர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.