கண்ணுபட்டு போச்சுய்யா சங்கரப்பா.. 25 – ஐ மணந்த 50 பலியான சோகம்.. சிங்கிள் பசங்க வயிற்றில் பயர் விட்டவர்.!

50 வயதில் 25 வயது இளம் பெண்ணை மணந்ததால் சமூக வலைதளங்களில் பிரபலமான சங்கரப்பா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளம் மனைவியுடன்காதல் டூயட்டுக்கு இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டவருக்கு நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டு மாலையும் கழுத்துமாக சமூக வலைதளங்களில் வைரலாகி சிங்கிள் பசங்களின் வயிற்றில் பயரை எரிய விட்ட 50 வயது சங்கரப்பா இவர் தான்..!

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் அக்கிமரிபால்யம் கிராமத்தை சேர்ந்த 50 வயதான சங்கரப்பா , கடந்தாண்டு அதே பகுதியை சேர்ந்த மேகனா என்ற 25 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அப்போது வைரலாகியதால் ஒரே நாளில் பிரபலமானார் சங்கரப்பா..!

திருமணம் முடிந்த கையோடு சங்கரப்பா தனது இளம் மனைவி மேகனாவின் விருப்பத்திற்கு ஏற்ப இன்ஸ்டாகிராமில் காதல் டூயட்டுக்கு நடந்தும் ஆடியும் வீடியோ வெல்லாம் பதிவிட்டு , திருமணமாக இளைஞர்களின் கண்களை கலங்க வைத்தார்

திருமணம் முடிந்து ஆறு மாதம் கடந்த நிலையில் நாய் வளர்க்கும் விவகாரத்தில் தனது தாயிக்கு ஆதரவாக பேசியதால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சங்கரப்பாவாவை , மனைவி மேகனா கடும் சொற்களால் பேசியதால் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் திங்கட்கிழமை மாலை மீண்டும் தாயிக்கு ஆதரவாக பேசியதால் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மனைவியின் உக்கிரத்தால் மனமுடைந்த சங்கரப்பா வீட்டிலிருந்து வெளியேறி காணாமல் போனதாக கூறப்படுகின்றது.

மனைவி மேகனாவும் உறவினர்களும் சங்கரப்பாவை தேடி வந்தனர் . இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆண் சடலம் ஒன்று தூக்கிட்ட நிலையில் பலா மரத்தில் சங்கரப்பா தனது வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்து அங்கு ஓடிச்சென்ற மனைவி மேகனா சங்கரப்பாவின் சடலத்துக்கு அடியில் அமர்ந்து கதறி அழுதார். மற்ற உறவினர்கள் எவரும் சடலத்தின் அருகே செல்லவில்லை.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபரீத முடிவுக்கு குடும்ப பிரச்சனை காரணம் என்ற நிலையில் உயரமான பலாமரத்தில் சிறிய அளவிலான மரக்கிளையின் உதவியுடன் சங்கரப்பா எப்படி ஏறிச்சென்று தூக்கிட்டு தொங்கி இருப்பார் ? என்று சங்கரப்பாவின் மரணம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதால் மேகனாவின் செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.