கீவ் நகரில் படைகளைக் குறைக்க ரஷ்யா முடிவு| Dinamalar

உக்ரைன் தலைநகர் கீவில் படைகளைக் குறைத்துக் கொள்வதாக ரஷ்யா முடிவெடுத்துள்ளது.துருக்கி தலைநகா் இஸ்தான்புல்லில் இன்று நடைபெற்ற உக்ரைன் – ரஷ்யா பேச்சுவார்த்தையில் இம்முடிவு எடுக்கப்பட்டாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

துருக்கி அதிபா் ரிசப் தாயிப் எா்டோகன், ரஷ்ய அதிபா் விளாடிமிர் புடினுடன் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசிய பின்னா் இதற்கு ஒப்புதல் பெறப்பட்டது.
முன்னதாக, உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி ரஷ்ய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், எங்களது இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதே உக்ரைனின் முன்னுரிமை. அதேவேளையில் பாதுகாப்பு உத்தரவாதம், நடுநிலை வகிப்பது, அணுஆயுதம் இல்லாத நாடு ஆகியவற்றை அறிவிக்க உக்ரைன் தயாராக உள்ளது எனக் கூறியிருந்தார்.

latest tamil news

இந்நிலையில், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள படைகளை குறைத்துக் கொள்வதாக ரஷ்யா தெரிவித்ததுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.