குடிநீர் நிலையம் பராமரிப்பு இன்று, நாளை சப்ளை தடை| Dinamalar

மைசூரு-ஹொங்கள்ளி 2, 3வது ஸ்டேஜில் குடிநீர் பம்பிங் நிலையத்தில் பராமரிப்பு நடப்பதால், இன்றும், நாளையும் நகரில் பல இடங்களில் குடிநீர் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.கர்நாடக நகர குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:ஹொங்கள்ளி 2, 3வது ஸ்டேஜில் குடிநீர் பம்பிங் நிலையத்தில் பராமரிப்பு நடப்பதால், இன்றும், நாளையும் நகரில் பல இடங்களில் குடிநீர் வினிேயாகம் தடை செய்யப்படுகிறது. இதனால், மாநகராட்சி வார்டு எண், 1 முதல் 7 வரை, 20, 23, 38, 42, 43, 44, 45, 47 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட ஹெப்பால், கும்பாரகொப்பால், மஞ்சேகவுடன கொப்பால், கே.ஜி.கொப்பால்.மேடகள்ளி, லோகநாயக் நகர், பிருந்தாவன் லே – அவுட், ஒண்டிகொப்பால், விநாயகா நகரிலுள்ள படுவரஹள்ளி, மண்டி மொஹல்லா, லஷ்கர் மொஹல்லா, சாரதா தேவி நகர், சரஸ்வதிபுரம், போகடி, விஜயநகர், கோகுலம், ஆர்.எம்.பி., பி.இ.எம்.எல்., யாதவகிரி, பன்னிமண்டபம், சித்திக் நகர், சிவராத்திரீஸ்வரா நகர், திலக் நகர்.படேமகான், ஹலிம் நகர், தேவராஜா மொஹல்லாவின் சில பகுதிகள், என்.ஆர்.மொஹல்லா, நசர்பாத், வித்யாரண்யபுரம், கிருஷ்ணமூர்த்திபுரம், ஜனதா நகர், கே.எச்.பி.காலனி, ஹூடகள்ளி.ஆகிய பகுதிகளில் குடிநீர் வராது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.