சிறுவனுக்கு பாலியல் தொல்லை! போக்சோவில் கைதான திருமணமான இளைஞர்.!

குளித்தலை அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருமணமான இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் வசித்து வரும் ஆனந்தன் என்பவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். மனைவியை பிரிந்து வாழும் இவர் கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வரும் 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து காவல்துறையினர், ஆனந்தனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.