துரத்தித் துரத்தி கடித்த வெறிநாய்.. சிறுமி உட்பட எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதி.!

பாலக்கோடு அருகே தெருவில் சென்றவர்களை வெறிநாய் துரத்தி துரத்தி கடித்து இதில் காயமடைந்த இரண்டு சிறுமிகள் உட்பட 8 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பஞ்சப்பள்ளி பகுதியில் உள்ள தெருவில் ஏராளமான வெறி நாய்கள் சுற்றி திரிகின்றன. இந்த நிலையில் நேற்று வீதியில் சென்றவர்களை வெறிநாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்து குதறியுள்ளது.

இதில் பஞ்சப்பள்ளி பகுதியை சேர்ந்த மாதவராஜ் என்பவரின் மகள் நிஷா (15 வயது), அருண் என்பவரின் மகள் தாரிகா (8வயது), கோமதி (30 வயது), நரசிம்மன் (40 வயது), சந்திரசேகர் (49 வயது) உட்பட 8 பேரை வெறி நாய் கடித்ததில் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பஞ்சப்பள்ளி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.