பிகினியில் தெறிக்கவிடும் திவ்யபாரதி

'பேச்சிலர்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யபாரதி. ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ள திவ்யபாரதி அவரது சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்களைப் பார்க்கும் சீனியர் நடிகைகளுக்குக் கண்டிப்பாக அதிர்ச்சியும், ஆச்சரியமும் இருக்கும். அந்த அளவிற்கு கிளாமரான புகைப்படங்களைத் தொடர்ந்து பதிவிடுவார் திவ்யா.

தற்போது மாலத்தீவில் சுற்றுலா சென்றுள்ள திவ்யாபாரதி அடுத்தடுத்து பதிவிட்டுள்ள சில புகைப்படங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. விதவிதமான கோணங்களில், விதவிதமான ஆடைகளில் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். அவற்றின் உச்சமாக நேற்று பிகினி உடையில் கடற்கரை மணலில் விளையாடும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவேற்றியுள்ளார்.

இப்படியான புகைப்படங்களை ஹாலிவுட், பாலிவுட் நடிகைகள்தான் பதிவிடுவது வழக்கம். அவர்களுக்கு தமிழ் நடிகையான தான் சற்றும் சளைத்தவரல்ல என்று திவ்யபாரதி பதிவிடுகிறாரோ ?. இந்த பிகினி புகைப்படங்களுக்கு சில ரசிகர்கள் கோபமாகவும், கெட்ட வார்த்தையிலும், சில ரசிகர்கள் பாராட்டியும் கமெண்ட் செய்துள்ளார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.