பிரம்மாஸ்த்ரா' முதல் பாகத்தின் படப்பிடிப்பின் முக்கிய அப்டேட் வெளியிடு…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

அமிதாப்பச்சன், ஆலியா பட்,
ரன்பீர்
கபூர், நாகார்ஜுனா இணைந்து நடித்துவந்த
பிரம்மாஸ்திரம்
படத்தின் சூட்டிங் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதுகுறித்து ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர் சமூகவலைதளங்களில் அப்டேட் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட்டில் அயன்
முகர்ஜி
இயக்கத்தில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் பிரம்மாஸ்திரா. இந்தப் படம் கடந்த 2018ல் சூட்டிங் துவங்கப்பட்டது. 3 பாகங்களாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் முதல்பாகம் கடந்த 2019ல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது

இனி பாலா அப்படி செய்யமாட்டார்…ஆறுதல் கூறும் அவர்கள்..!

ஆனால் தொடர்ந்து படத்தின்
ரிலீஸ்
தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப் போனது. தற்போது படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த வீடியோவையும் வெளியிட்டு ஆலியா பட் சூட்டிங் நிறைவடைந்துள்ளதை பகிர்ந்துள்ளார்.’பிரம்மாஸ்த்ரா’, பண்டைய இந்தியா மற்றும் தற்போதைய மாடர்ன் இந்தியா இணைந்த கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக மாறியுள்ளது ‘பிரம்மாஸ்த்ரா’.

Fox Star
Studios,
Dharma
Productions, Prime Focus மற்றும்
Starlight
Pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 இந்திய மொழிகளில் வரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

‘பிரம்மாஸ்த்ரா’ திரைப்படம்மூன்று பாகங்களாக உருவாக உள்ளது. தற்போது முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. ரன்பிர் மற்றும் ஆலியா படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் உற்சாகமாகக் காணப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

அடுத்த செய்திமனைவியை பற்றி ‘அந்த’ வார்த்தை சொன்ன பாலா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.