புதுச்சேரி சட்டசபை இடைக்கால பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி-புதுச்சேரி சட்டசபை, நாளை கூடுகிறது. முதல்வர் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.புதுச்சேரி 15வது சட்டசபையின் 2வது கூட்டத் தொடர், கடந்த பிப்., 23ம் தேதி கூடியது. அதன் தொடர்ச்சியாக, நாளை 30ம் தேதி காலை 9:30 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடுகிறது.கூட்டத்தில், 2022-23ம் நிதி ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை, நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார். மேலும், 2021-22ம் நிதி ஆண்டிற்கான கூடுதல் செலவினம் குறித்த மசோதாவையும் முதல்வர் தாக்கல் செய்ய உள்ளார்.சட்டசபை நாளை கூட உள்ளதையொட்டி, சட்டசபை வளாகத்தை ஊழியர்கள் நேற்று சுத்தம் செய்தனர். இப்பணியை சபாநாயகர் செல்வம் ஆய்வு செய்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.