மகனை அரசு பள்ளியில் சேர்த்த கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.,

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரது குழந்தையை அரசு பள்ளியில் சேர்த்தார்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஹரி கிரண் பிரசாத் கடந்த 26ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், அவரது 5 வயது மகன் நிஸ்விக்-ஐ நாகர்கோவிலில் உள்ள கவிமணி அரசு தொடக்கப் பள்ளியில் அவர் சேர்த்துள்ளார்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் தரம் உயர்ந்துள்ளதாகவும், அரசு பள்ளிகளின் தரத்தை தெரிவிக்கும் வகையிலும் அனைவரும் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் தனது மகனை சேர்த்தாக அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.