மகன் வாங்கிய கடனுக்காக பெற்றோர் மீது தாக்குதல்.. மாரடைப்பால் மகன் இறந்துவிட்டதால், பெற்றோர் மீது விழுந்த கடன் சுமை

புதுச்சேரியில் மகன் வாங்கிய கடனை திருப்பி தரக் கூறி, கடைக்குள் புகுந்து வயதான தம்பதி மீது தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நாவற்குளம் பகுதியைச் சேர்ந்த கணேஷ்குமார், பிரகாஷ் என்பவரிடம் தொழில் தொடங்குவதற்காக சுமார் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடனை திருப்பி செலுத்த முடியாமல், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கணேஷ்குமார் உயிரிழந்த நிலையில், மகன் வாங்கிய கடனை திருப்பி செலுத்தக் கூறி, அடிக்கடி கணேஷ்குமாரின் பெற்றோர் நடத்தி வரும் மளிகைக் கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டு வந்த பிரகாஷ், சம்பவத்தன்று தனது கூட்டாளிகளுடன் வந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

பதிலுக்கு முதிய தம்பதியும் அவர்கள் மீது கையில் கிடைத்த பொருட்களை எறிந்து தாக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. முதியவர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.