மானிய உரங்கள் விற்பனையில் இதர விவசாய இடுபொருட்களை விற்றால் உரக்கடை உரிமம் ரத்து செய்யப்படும்: வேளாண்துறை அமைச்சர் எச்சரிக்கை

சென்னை:மானிய உரங்கள் விற்பனையில் இதர விவசாய இடுபொருட்களை விற்றால் உரக்கடை உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். விவசாயிகளிடமிருந்து வந்த புகாரையடுத்து, இடுபொருட்களைவலுக்கட்டாயமாக விற்கும் உர விற்பனையாளர்களின் விற்பனை உரிமங்கள் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதர இடுபொருட்களை வாங்க கட்டாயப்படுத்துவதால் விவசாயிகள் கூடுதல் செலவு செய்யும் சூழல் ஏற்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.