ரஷ்ய தாக்குதலால் உருக்குலைந்துள்ள உக்ரைனுக்கு, இசைக் கச்சேரி மூலம் அமெரிக்கா நிதி வசூல்

ரஷ்ய படைகளின் தாக்குதலினால் உருக்குலைந்துள்ள உக்ரைனுக்கு உலக நாடுகள் பல்வேறு உதவிகளை அளித்து வரும் நிலையில் அமெரிக்காவில் இசைக் கச்சேரி மூலம் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதி திரட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா வாழ் குஜராத் மக்கள் இதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஜார்ஜியாவின் அட்லாண்டா பகுதியில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் பிரபல நாட்டுப்புற பாடகி Gitaben Rabari, பாடல்கள் பாடினார். அப்போது ரசிகர்கள் அவர் மீது பணமழை பொழிந்தனர்.

இசைநிகழ்ச்சியின் மூலம் கிடைத்த இந்திய மதிப்பில் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் பணத்தை போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்காக வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.