ரோஹித் ஷர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்!


மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் டி20 ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் தனது தொடக்க ஆட்டத்தை இழந்ததை அடுத்து, புதிய சீசனில் ஓவர்-ரேட் பெனால்டியைப் பெற்ற முதல் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

போட்டியிலும் தோல்வியடைந்து அபராதமும் கட்டுவதும் ரோஹித் ஷர்மாவுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல் ஆனது.

ரோஹித்தின் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 10-வது ஆண்டாக தனது சீசன் தொடக்க ஆட்டத்தை இழந்தது.

“குறைந்தபட்ச விதி மீறல் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின்படி இந்த சீசனின் முதல் குற்றமாக இது இருந்ததால், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது” என்று ஐபிஎல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.