விற்பனை கண்காட்சியில் பங்கேற்க சுய உதவி குழுக்கள் முன்பதிவு செய்யலாம்

சென்னை: சென்னையில் 2022-23ம் ஆண்டு கோடைக் கொண்டாட்டத்தினை முன்னிட்டு மாநில அளவிலான சுயஉதவிக் குழு உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.சுயஉதவிக் குழுக்களுக்காக நடைபெறும் இக்கண்காட்சியில் பங்குபெற விருப்பமுள்ள சுயஉதவிக் குழுக்கள் தங்கள் குழு தயார் செய்யும் பொருட்கள் தொடர்பான விவரங்களை திட்ட இயக்குநர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், எண்.100, அண்ணா சாலை, கிண்டி, சென்னை-600 032. (மாசு கட்டுப்பாட்டு வாரியம் அருகில்) என்ற முகவரியில் முன்பதிவு செய்திட வேண்டும். மேலும் 044-2235 0636 என்ற தொலைபேசி எண் மற்றும் 9444094249 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.