9 நாட்கள் முழு ஊரடங்கு – அரசு உத்தரவால் பொது மக்கள் ஷாக்!

சீனாவின் ஷாங்காய் நகரில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், பொது மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

சீனாவில், கடந்த சில வாரங்களாக,
கொரோனா
வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாங்சுன், ஜலின் உள்ளிட்ட நகரங்களில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து அங்கு முழு ஊரடங்கை பிறப்பித்து சீன அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கிடையே, சீனாவின் மற்றொரு பெரிய நகரமான, ஷாங்காயில், கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வந்ததை அடுத்து, வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக, முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சுமார் 2.6 கோடி மக்கள் வசிக்கும் ஷாங்காய் நகரில், முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அத்தியாவசியக் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. பொது மக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஏப்ரல் 5 வரை மீண்டும் முழு ஊரடங்கு – அரசு அதிரடி உத்தரவு!

இந்நிலையில் கொரோனா பரிசோதனைக்காக மட்டுமே பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என ஷாங்காய் நகர நிர்வாகிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், செல்லப் பிராணிகளுடன் நடைபயிற்சி செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளனர். கட்டடங்களின் லாபிகளிலும் பொது மக்கள் நிற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, ஷாங்காயில் நேற்று 3,500 ஆக இருந்த கொரோனா தினசரி பாதிப்பு, இன்று 4,477 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் இன்று கொரோனா தினசரி பாதிப்பு 6,886 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

அடுத்த செய்திசாலமன் தீவில் புகுகிறது சீனா.. உருவாகிறது கடற்படைத் தளம்.. பரபர தகவல்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.