அரசு ஊழியர்களின் பதவிக்கு ஆபத்து – வெளியானது புது உத்தரவு!

அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, ஆட்சி மற்றும் அதிகாரத்தை
தாலிபான்
அமைப்பினர் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து அந்த அமைப்பின் மூத்தத் தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசு அமைக்கப்பட்டது.

இருப்பினும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்க மறுத்து வருகின்றன. இதனால் உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகள்
ஆப்கன்
அரசுக்கு தடை விதித்துள்ளன. தாலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. பெண்கள் வேலைக்கு செல்லக் கூடாது; தனியாக வெளியே நடமாடக் கூடாது என தாலிபான்கள் உத்தரவிட்டனர். மாணவிகள் பள்ளிக்குச் செல்லக் கூடாது போன்ற உத்தரவுகளை பிறப்பித்தனர்.

முடிவுக்கு வரும் உக்ரைன் போர் – ரஷ்யா சொன்ன குட் நியூஸ்!

இந்நிலையில்,
தாடி
வைக்காத அரசு ஊழியர்களின் அரசு பணி பறிக்கப்படும் என தாலிபான்கள் கட்டாய உத்தரவு பிறப்பித்து உள்ளனர். இதன்படி ஆண்கள் பைஜாமா, ஜிப்பா உடன் தலையில் இஸ்லாமிய டர்பன் அணிய வேண்டும். மேலும் தங்களது தாடியை சவரம் செய்யக் கூடாது. இந்த கட்டுப்பாடுகளை மீறினால் அவர்களது அரசுப் பணி பறிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாடி வளர்க்காமல் சவரம் செய்து வருபவர்கள் அரசு அலுவலகங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் உத்தரவு பிறக்கப்பிட்டு உள்ளது.

அடுத்த செய்தி”காமெடியன்”களுக்கு நேரமே சரியில்லை.. இதை யாராவது கவனிச்சீங்களா!?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.