அரசு ஊழியர்கள் தாடி வளர்க்க தலிபான்கள் அதிரடி உத்தரவு| Dinamalar

காபூல்:’தாடி வளர்க்காத மற்றும் மத பாரம்பரிய உடை அணியாத அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்’ என, தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், கடந்த ஆண்டு, தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அப்போதிருந்தே அவர்கள், பல கடும் சட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர். சமீபத்தில், பெண்கள் தனியாக விமானப் பயணம் செய்ய தடை விதித்தனர். அதேபோல், ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்க, பெண்களுக்கு அனுமதி இல்லை. பூங்காக்களில் வாரத்துக்கு மூன்று நாட்கள் மட்டுமே, பெண்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இப்படி பெண்களுக்கு எதிராக கடும் சட்டங்களை அமல்படுத்திய தலிபான்கள், தற்போது, அரசு ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாட்டை விதித்துள்ளனர்.’அரசு ஊழியர்கள் தாடி வளர்க்க வேண்டும். மத பாரம்பரிய உடையான, மிக நீண்ட ஜிப்பா மற்றும் பேன்ட், தலையில் குல்லா அணிய வேண்டும்’ என, தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதை மீறுபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.