இஸ்ரேலில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதி சுட்டதில் 5 பேர் உயிரிழப்பு

இஸ்ரேலின் டெல் அவிவ் புறநகர்ப் பகுதியில் துப்பாக்கியால் 5 பேரை சுட்டுக் கொன்ற தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

குடியிருப்பு பகுதிகளில் பால்கனியில் நின்றவர்கள் மீதும் காரில் இருந்தவர்கள் மீதும் ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கிச் சூடுநடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விவரித்தனர்.

5 பேரை சுட்டுக் கொன்ற அந்த நபரும் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த நபர் பாலஸ்தீனத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று பாதுகாப்பு படையினர் சந்தேகிப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரமும் இதே போன்று 4 பேரை சுட்டுக் கொன்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டான்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.