கேரள ஐ.டி., பூங்காக்களில் மது விற்பனைக்கு அனுமதி| Dinamalar

திருவனந்தபுரம் : கேரளாவில், ஐ.டி., பூங்காக்களில், மது விற்பனை செய்ய மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், புதிய மதுக்கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில், ஐ.டி., பூங்காக்களில் மது விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநில கலால் துறை வெளியிட்ட அறிக்கை:ஐ.டி., பூங்காக்களில், பணி நேரம் முடிந்தபின், ஊழியர்களுக்கு கொண்டாட்டங்களில் ஈடுபட வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதால், இங்கு மது விற்பனை செய்ய அனுமதி கோரப்பட்டிருந்தது.எனவே, புதிய மதுக்கொள்கையின்படி, ஐ.டி., பூங்காக்களில் உள்ள சில பகுதிகளில் மட்டும், கடும் நிபந்தனைகளுடன், மது விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக, சிறப்பு உரிமங்கள் வினியோகிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.