கொடுமை… விபத்தில் நடிகர் அகால மரணம்… முதல் படம் ரிலீஸாவதற்குள் அரங்கேறிய சோகம்!

சென்னை
செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார். 40 வயதான ஜெயக்குமார் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பெரும்பாடுபட்டு ஹீரோவாகியுள்ளார்.

செங்குன்றம் என உருவாகும் படத்தில் ஹீரோவாக நடித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்பை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செங்குன்றம் – திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அவரது பைக்கும் எதிரே வந்த மற்றொரு இளைஞரின் பைக்கும் நேருக்கு நேர் மோதியது.

இதில் இருவருமே பலத்த காயமடைந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு பாடியநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர்
நடிகர் ஜெயக்குமார்
மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் ஜெயக்குமார் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.

கொடுமை… விபத்தில் நடிகர் அகால மரணம்… முதல் படம் ரிலீஸாவதற்குள் அரங்கேறிய சோகம்!

பெரும் கனவுகளோடு அவர் நடித்து வந்த முதல் படமே இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அதற்குள் ஜெயக்குமார் சாலை விபத்தில் அகால மரணமடைந்தது திரைத்துறையினரையும் அவரது குடும்பத்தினரையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்திதளபதி பட இயக்குனருக்கு இந்த நிலைமையா..?: புலம்பித் தவிக்கும் அட்லி..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.