சென்னையில் திமுக வழக்கறிஞர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற மர்மநபர்கள்.!

சென்னை எண்ணூரில் திமுக வழக்கறிஞர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தனது காரில் முல்லைநகர் அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட மர்மகும்பல் காரின் முகப்பு பக்கத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி, அவரை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்க முயன்றுள்ளது.

இதில், சிறுகாயங்களுடன் உயிர் தப்பிய அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், எர்ணாவூர் பகுதியில் கஞ்சா விற்பனை குறித்து தகவல் அளித்ததால் முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.